தூத்துக்குடி, அக்.3&
சென்னை&தூத்துக்குடி இடையே அடுத்த மாதம் முதல் கூடுதல் விமான சேவையை தனியார் நிறுவனம் துவங்கவுள்ளது. இந்த சேவை நவ. 13 லிருந்து தொடங்கும்.
தற்போது சென்னை&தூத்துக்குடி இடையே கிங் பிஷர் விமான சேவை நடைபெற்று வருகிறது. தினசரி ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறுவதால் பெரும்பாலான பயணிகள் மதுரை சென்று விமானத்தை பயன்படுத்தும் நிலை தொடர்ந்து வருகிறது.
இதனால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்று சென்னை&தூத்துக்குடி இடையே தினசரி காலை, மாலை ஆகிய இருமுறையும் விமான சேவை தொடங்க இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது. இந்த சேவை நவ. 13ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. இதன் மூலம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திலிருந்து மதுரை சென்று விமானத்தை பயன்படுத்தும் பயணிகள் இனி தூத்துக்குடியில் இருந்தே தங்களுக்கு வசதியான நேரத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதால் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த சேவையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியை விமான போக்குவரத்து ஆணையம் விரைந்து நிறைவு செய்தால் இரவு நேரத்திலும், பெரிய ரக விமானங்களும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக