Live Free Sun TV Online

திங்கள், 10 அக்டோபர், 2011

ஏரல் பேரூராட்சி பகுதியில் ஜெயதுரை எம்.பி. வாக்குசேகரிப்பு

ஏரல் பேரூராட்சி பகுதியில் ஜெயதுரை எம்.பி. வாக்குசேகரிப்பு ஏரல், அக்.10: ஏரல் பேரூ ராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ் ணன் மற்றும் வார்டு கவுன்சிலர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஜெயதுரை எம்.பி. வாக்கு சேகரித்தார். ஏரல் சவுக்கை அம்மன் கோவில் தெரு, பரதர் வடக்கு தெரு, பரதர் நடுத்தெரு, நாடார் தெரு, நாடார் முடுக்குத்தெரு, ஓடக்கரை தெரு, ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய கேட்டுக் கொண்டார். நகர செயலாளர் பார்த்திபன், இளைஞரணி செயலாளர் ஜோதிராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எட்வர்ட், முன்னாள் செயலாளர் பச்சைப்பெருமாள், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ் பண்ணையார் மற்றும் மணிவண்ணன், சுடலை, செந்தில் ஆறுமுகம், செந்தில்குமார், வேல்முருகன், செல்வகுகன், ராஜாங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏரல் பேரூராட்சி திமுக வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து ஜெயதுரை எம்பி, வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

கருத்துகள் இல்லை: