Live Free Sun TV Online

வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேதமாகிய பாலத்தை உடனே சீர் செய்ய வேண்டும்

தூத்துக்குடி :நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேர்மன் கோயில் அருகே உள்ள பாலம் சேதமாகியிருப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இதனை சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் சேர்மன் கோயில் அருகே சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சமீபத்தில் பெய்த மழையினால் சேதமடைந்தது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் வழியாக அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.
அதிக பஸ் போக்குவரத்தும் இருப்பதால் பிசியான ரோடாக இந்த ரோடு இருந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையினால் பாலத்தின் சைடு சுவர் சேதமாகியும், பாலத்தின் மேல்தளத்தின் ஒரு பகுதி மோசமாகி இருக்கிறது.
இதனால் பஸ் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் மேற்கொள்வதற்காக பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக சிரமப்பட்டு பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக வாகன போக்குவரத்து இருபப்தால் இதே நிலை தொடர்ந்தால் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் இந்த பணியை செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும் என்று ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.