Live Free Sun TV Online

சனி, 22 செப்டம்பர், 2012

கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 47 ரேஷன்கார்டுகள் புழக்கத் தில் உள்ளன.
இதில் 3 லட் சத்து 83 ஆயிரத்து 951 கார்டுதாரர்கள் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 70 சதவீதம் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்கிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களையும் வகையில் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 2 சிலிண்டர் உடனடியாக வழங்குவதன் மூலம் மண்ணெண்ணெய் தேவை யின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 322 பேர் ஒரு கேஸ் சிலிண்டரும், 75 ஆயி ரத்து 96 பேர் 2 சிலிண்டர்களும் என மொத்தம் 2 லட் சத்து 20 ஆயிரத்து 418 பேர் சிலிண்டர்கள் வைத்துள்ளனர். ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பித்தால் விரைவில் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
எனவே 2&வது சிலிண் டர் பெற சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு விண்ணப்பம் அளிக்கலாம்.
இதில் ஏதே னும் சிரமம் ஏற்பட்டால் தூத்துக்குடி மாவட்ட வழங் கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் 0461&2341471, தனி தாசில் தார் 94450 00371, ஸ்ரீவை குண்டம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00372, திருச்செந்தூர் வட்ட வழங் கல் அலுவலர் 94450 00373, சாத்தான்குளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00374, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00375, ஓட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00376, விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00377, எட்டயபுரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00378 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ள லாம். மேலும் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் இணைப்பு வைத்திருப்போர்
2வது சிலிண்டருக்கு விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தகவல்

கருத்துகள் இல்லை: