ஏரல், : ஏரல் அருகே முக்காணி-ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற 25 லாரி களை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் என்ற பெயரில் லாரிகளில் தண் ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் அழிந்து வருவதோடு, பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் லாரிகளை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் தண்ணீர் எடுக்கும் லாரி களை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் கொண்டு செல்லக்கூடாது என கூறி நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை முக்காணி ரவுண் டானா அருகில் தூத்துக் குடி தெற்கு மாவட்ட பாமக சார்பில் முக்காணி- ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற லாரிகளை சிறைபிடித்தனர்.
தெற்கு மாவட்ட செய லாளர் உமரிநெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சர வணன் முன்னிலை வகித் தார். மாநில துணை பொதுச்செயலாளர் உச்சல்சிங், மத்திய மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், மத்திய மாவட்ட செய லாளர் கிறிஸ்டி, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் அரிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் வீரபாண்டியன், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் செட்டி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பகுதி வழியாக சென்ற 25க்கும் மேற்ப்பட்ட லாரிகளை சிறைபிடித்ததால் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்ததும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக் டர் பார்த்திபன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை (இன்று) ஸ்ரீவை தாசில்தாரிடம் இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடமாறும் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். லாரி களும் விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் என்ற பெயரில் லாரிகளில் தண் ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் அழிந்து வருவதோடு, பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் லாரிகளை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் தண்ணீர் எடுக்கும் லாரி களை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் கொண்டு செல்லக்கூடாது என கூறி நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை முக்காணி ரவுண் டானா அருகில் தூத்துக் குடி தெற்கு மாவட்ட பாமக சார்பில் முக்காணி- ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற லாரிகளை சிறைபிடித்தனர்.
தெற்கு மாவட்ட செய லாளர் உமரிநெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சர வணன் முன்னிலை வகித் தார். மாநில துணை பொதுச்செயலாளர் உச்சல்சிங், மத்திய மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், மத்திய மாவட்ட செய லாளர் கிறிஸ்டி, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் அரிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் வீரபாண்டியன், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் செட்டி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பகுதி வழியாக சென்ற 25க்கும் மேற்ப்பட்ட லாரிகளை சிறைபிடித்ததால் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்ததும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக் டர் பார்த்திபன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை (இன்று) ஸ்ரீவை தாசில்தாரிடம் இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடமாறும் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். லாரி களும் விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.