சனி, 2 நவம்பர், 2013
Sirappu Pattimandram Dt 02-11-13
http://www.youtube.com/v/da3z0mbi23I?autohide=1&version=3&attribution_tag=CSFqzU9S3tEI90oibeQlSQ&showinfo=1&autoplay=1&autohide=1&feature=share
வெள்ளி, 1 நவம்பர், 2013
செவ்வாய், 29 அக்டோபர், 2013
திங்கள், 28 அக்டோபர், 2013
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
புதன், 19 ஜூன், 2013
ஏரல் பகுதியில் குறுமணல் தட்டுப்பாடு
ஏரல் பகுதியில் குறுமணல் தட்டுப்பாடு
நலிவடையும் செங்கல் சூளை தொழில்
ஏரல் புதுமனையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் செங்கல்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரல், ஜூன் 19:
குறுமணல் தட்டுப்பாட்டால் ஏரல் பகுதிகளில் செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல்லான், ஆலடியூர், உமரிக்காடு, முக்காணி, லெட்சுமிபுரம், இரண் டாம்பண்னைவிளை, குரங்கணி, மாவடிபண்ணை, தென்திருப்பேரை, பால்குளம் ஆழ்வார்தோப்பு பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் சேம்பர் செங்கல்கள் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இப்பகுதியில் 15 சேம்பர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும் உள்ளன.
இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் செங்கல் உற்பத்தி பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். இடையில் மழைக்காலத்தில் மூன்று மாதங்கள் தொழில் நிறுத்தி வைக்கப்படும். கடந்த ஆண்டு சேம்பர் செங்கல் ஒன்று ரூ6க்கும், சூளையில் தயாரிக்கப்படும் சாதா செங்கல் ஒன்று ரூ.5.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது செங்கல் விலை குறைந்துள்ளது. ரூ.6க்கு விற்ற சேம்பர் செங்கல் ஒன்று ரூ4.50 முதல் ரூ.5 வரை விற்பனையாகிறது. அதேபோல சாதாரண செங்கல் தற்போது ரூ3.90 முதல் 4.10 வரை விற்பனையாகிறது. செங்கல் விற்பனை குறைவாக உள்ளதால் ஒவ்வொரு சேம்பரிலும் லட்சக்கணக்கான செங்கல் இருப்பில் உள்ளன. மேலும் செங்கல் தயாரிப்புக்கு தேவையான குறுமணல் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் செங்கல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒரு சில இடங்களில் செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு சேம்பர் நடத்தி வருபவர்கள் ஒன்றை நிறுத்திவிட்டு ஒன்றில் மட்டும் செங்கல் தயாரித்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் செங்கல் தொழில் முழு வதும் பாதிக்கப்படுவதோடு தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேம்பர் உரிமை யாளர் ராயப்பன் கூறியதா வது:
செங்கல் தயாரிக்க குறுமண் கிடைப்பதே கடினமாக உள்ளது. குறுமணலுக்கு அதிக விலை கொடுத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலாளர்களும் வேலைக்கு சரியாக கிடைப்பதில்லை. இருந் தாலும் இருக்கிற தொழிலாளர்களை கொண்டு செங்கல் தயாரித்து வருகிறோம். கடந்த ஆண்டைவிட செங்கல் விலை குறைந்தாலும் விற்பனை குறைவாகவே உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசு இலவச வீடுகளும், அரசு கட்டிடங்களும் அதிக அளவு கட்டப்பட்டு வந்த தால் இங்கு தயார் செய்யப்படும் செங்கல்கள் பிற மாவட்டங்களுக்கு சென்றன.
இதனால் செங்கல் விலை அதிகமாக இருந் தாலும் தட்டுப்பாடுடன் இருந்து வந்தது. ஆனால் தற்போது விலை குறைந்தாலும் விற்பனை சரிவர இல்லை.
மேலும் குறுமணல் கிடைப்பது அரிதாக உள் ளது. இதனால் சேம்பர் களை மூடுவதை தவிர வேறு வழியில்லை� என்றார்.
10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
வெள்ளி, 7 ஜூன், 2013
மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம் !
மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது, திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும். சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி தரும் மாத்தூர் தொட்டி பாலம் விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’ என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும்.
திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன
பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது. மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!
இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்கவில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.
திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன
பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது. மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!
இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்கவில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.
புதன், 1 மே, 2013
ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஏரல், மே. 1&
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன விவசாயிகளுக்கு முன்கார் சாகுபடிக்கு அனுமதி கோரி ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன பகுதிகளில் உள்ள 21113.54 ஏக்கர்களுக்கு ஏப்ரல் 1&ம் தேதி அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தற்போது பிசான சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த காலகட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் தண்ணீர் இருந்தும் அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கவில்லை.
எனவே முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்காததை கண்டித்தும், உடனடியாக அனுமதி வழங்க வலியுறுத்தியும் ஏரல் பேரூராட்சி அருகில் விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன் தலைமை வகித்தார்.
சமூக ஆர்வலர் ஜெயபாலன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைத்தலைவர் தானுலிங்கம்பிள்ளை, பொருளாளர் வில்சன் வெள்ளையா, செயலாளர் தர்மராஜ், முஸ்லீம் வணிகர் சங்கம் தலைவர் பாக்கர் அலி, ஆறுமுகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் அரிராமன், மேல ஆத்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அக்பர், ஏரல் பிஜேபி விவசாய அணி கருப்பசாமி, பாமக வியனரசு, ஆத்தூர் விவசாய சங்கம் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண் டனர்.
ஸ்ரீவை வடகால், தென்கால் பாசன பகுதி விவசாயிகளுக்கு முன் கார் சாகுபடி செய்ய அனுமதி வழங்க கோரி விவசாயிகள் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் நயினார் குலசேகரன் பேசினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)