Live Free Sun TV Online

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஏரலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ஏரல், : ஏரலில் மனித உரிமைகள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலை வர் வக்கீல் கார்த்திகேயன் தலைமை    வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து தலைவர் தசரத பாண்டியன், ஏரல் பேரூ ராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மணிவண்ணன், வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தாணுலிங்கபிள்ளை முன்னிலை வகித்தனர்.  மனித உரிமை கள் கழக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். 
ஏரல் வியாபாரிகள் சங்கம் செயலாளர் தர்மராஜ், பொருளாளர் வில்சன் வெள்ளையா, நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர்அலி, ஒய்வுபெற்ற ஆசிரியர் சங்கர பொன்னம்பலம் பேசினர். 
ஏரலில் இருந்து முக் காணி செல்லும் மெயின்ரோட்டில் போர்கள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்வதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட மனித உரிமைகள் கழகம் தலைவர் அமர்சிங் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: