Live Free Sun TV Online

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

பேட்மா நகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை

ஸ்ரீவைகுண்டம் : : பேட் மாநகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், குடிதண்ணீர் தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்ற நோக்கில் பேட்மாநகரம் பகுதி மக்கள் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைமை இமாம் ஹாஜி அப்துல் ஆமிது ஆலிம் தலைமையில் ஒரு நாள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைவர் ஹாஜி பீர் முகம்மது, துணைத்தலைவர் சிராஜ்தீன், நூருல் ஈமான் கல்வி அறக்ககட்டளை நிர்வாகி சித்திக் ஆலிம்,ஆசிரியர்கள் அகமது கபிர் ஆலிம், அப்துல் காதர் ஆலிம், லியாகத் ஆலிம், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் நட்டார், துணைத்தலைவர் அஷ்ரப் அலி ஆலிம், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பேட்மா நகரம் கிளை செயல் வீரர்கள் உள்பட ஐநூருக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஏரல், செப். 25:
நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரல் வடக்குப்பள்ளி ஜமாத்தலைவர் சஹாப்தின் தலைமை வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் ஜமாத் தலைவர் ஜெய்நூல் அசின், புதுமனை ஜமாத் தலைவர் அப்து�ல்சலாம், ஏரல் பெரிய பள்ளி நிர்வாகி பாக்கர் அலி முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில பேச்சாளர் பிர்தொசி, மாவட்ட தலைவர் ஆசாத் ஆகியோர் பேசினர். ஏரல் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவை குண்டம் டி.எஸ்.பி மணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சனி, 22 செப்டம்பர், 2012

காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆறுமுகநேரி, செப். 22:
நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி காயல்பட்டினம் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சீதக்காதி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் வாவு நாசர், மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஷ்ஹப், தமுமுக நகர தலைவர் ஜாகீர் உசேன், நகர துணைத்தலைவர் முர்ஷித், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நகர தலைவர் சம் சுதீன், நகர துணைத்தலை வர் சாலப்பா, காக்கும் கரங் கள் நிறுவன தலைவர் ஜெய்னுலாப்தீன், அல் அமீன் நற் பணி மன்ற தலைவர் சாகுல் ஹமீது, அல் ஜாமிவுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி புகாரி, இப்ராஹிம், மொக தூம் பள்ளி இப்ராஹிம், புதுப்பள்ளி சதக்கத்துல்லா மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர் கள், அனைத்து ஜமாத்தை என ஏராளமான முஸ்லிம் கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திரைபடத்தை தடை செய்யவும், அமெரிக்காவை கண்டித் தும், சம்பந்தப்பட்டவர்கள் மீதுநடவடிக்கை ஐ நா சபை வலியுறுத்தவும் கோஷங்கள் எழுப்பபட்டன.
ஆர்ப்பாட்டத்தையொட்டி திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், தில்லை நாக ராஜன், தங்கராஜ் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நபிகள் நாயகத்தை கேலி செய்து எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை தடை செய்யக்கோரி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 47 ரேஷன்கார்டுகள் புழக்கத் தில் உள்ளன.
இதில் 3 லட் சத்து 83 ஆயிரத்து 951 கார்டுதாரர்கள் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 70 சதவீதம் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்கிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களையும் வகையில் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 2 சிலிண்டர் உடனடியாக வழங்குவதன் மூலம் மண்ணெண்ணெய் தேவை யின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 322 பேர் ஒரு கேஸ் சிலிண்டரும், 75 ஆயி ரத்து 96 பேர் 2 சிலிண்டர்களும் என மொத்தம் 2 லட் சத்து 20 ஆயிரத்து 418 பேர் சிலிண்டர்கள் வைத்துள்ளனர். ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பித்தால் விரைவில் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
எனவே 2&வது சிலிண் டர் பெற சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு விண்ணப்பம் அளிக்கலாம்.
இதில் ஏதே னும் சிரமம் ஏற்பட்டால் தூத்துக்குடி மாவட்ட வழங் கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் 0461&2341471, தனி தாசில் தார் 94450 00371, ஸ்ரீவை குண்டம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00372, திருச்செந்தூர் வட்ட வழங் கல் அலுவலர் 94450 00373, சாத்தான்குளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00374, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00375, ஓட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00376, விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00377, எட்டயபுரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00378 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ள லாம். மேலும் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் இணைப்பு வைத்திருப்போர்
2வது சிலிண்டருக்கு விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தகவல்