ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஏரல், மே. 1&
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன விவசாயிகளுக்கு முன்கார் சாகுபடிக்கு அனுமதி கோரி ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன பகுதிகளில் உள்ள 21113.54 ஏக்கர்களுக்கு ஏப்ரல் 1&ம் தேதி அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தற்போது பிசான சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த காலகட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் தண்ணீர் இருந்தும் அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கவில்லை.
எனவே முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்காததை கண்டித்தும், உடனடியாக அனுமதி வழங்க வலியுறுத்தியும் ஏரல் பேரூராட்சி அருகில் விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன் தலைமை வகித்தார்.
சமூக ஆர்வலர் ஜெயபாலன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைத்தலைவர் தானுலிங்கம்பிள்ளை, பொருளாளர் வில்சன் வெள்ளையா, செயலாளர் தர்மராஜ், முஸ்லீம் வணிகர் சங்கம் தலைவர் பாக்கர் அலி, ஆறுமுகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் அரிராமன், மேல ஆத்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அக்பர், ஏரல் பிஜேபி விவசாய அணி கருப்பசாமி, பாமக வியனரசு, ஆத்தூர் விவசாய சங்கம் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண் டனர்.
ஸ்ரீவை வடகால், தென்கால் பாசன பகுதி விவசாயிகளுக்கு முன் கார் சாகுபடி செய்ய அனுமதி வழங்க கோரி விவசாயிகள் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் நயினார் குலசேகரன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக