ஏரல் மரக்கடையில் தீ
பைக், சைக்கிள் எரிந்து நாசம்
ஏரல், அக்.14&
ஏரல் திருவள்ளுவர் சாலை தொண்டமான் தெருவைச்சேர்ந்தவர் தியாகராஜன்(48). இவர் சிறுத்தொண்டநல்லூர் செல்லும் வாய்க்கால் பாலம் அருகே மரக்கடை வைத்துள்ளார். இது பரந்த இடம் என்பதால் தெரிந்தவர்கள் இரவில் பைக் மற்றும் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மரக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து திருவைகுண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த 2 மொபட், ஒரு பைக், பள்ளிக்குழந்தைகளின் 4 சைக்கிள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்து நாசமாகிவிட்டன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சமாகும். தீ எப்படி பிடித்தது என்பது குறித்து ஏரல் சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் விசாரித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக