ஏரல் : ஏரல்-நாசரேத் ரோட்டில் ஆக்ரமிப்புகளை அகற்றி இரண்டு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணியர் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறயிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக ஆக்ரமிப்புகள் காணப்படும் ரோடு ஏரல்-நாசரேத் ரோடாகும். இந்த வழியில் இரண்டு புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கில் வாகனங்களும் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் பல இடங்களில் இரண்டு பஸ்கள் விலகி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. விசேஷ காலங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் இதை கண்டு கொள்வது இல்லை.
குறிப்பாக இந்த ரோட்டில் கச்சினாவிளை-மூக்குப்பீறி, பிரகாசபுரம் பகுதிகளில் ஒரு பஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டில் ஆக்ரமிப்புகளை அதற்றினால் தான் சீரான போக்குவரத்திற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஏரல்-நாசரேத் ரோட்டில் 1947க்கு முன் உள்ள பிளான்படி வெளி மாவட்ட சர்வேயரை கொண்டு அளந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். வருவாய் துறையினர் இந்த ரோட்டில் ஆக்ரமிப்புகள் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு ஆக்ரமிப்பு செய்ய முடியுமோ அந்த அளவிற்கு ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். மாவட்ட நிர்வாகமும் இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரல்-நாசரேத் ரோட்டில் ஆக்ரமிப்புகளை அகற்றி இரண்டு வழிசாலையாக மாற்றம் செய்ய உத்தரவு இட வேண்டும் இவ்வாறு சாந்தகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக