Live Free Sun TV Online

செவ்வாய், 18 அக்டோபர், 2011

ஏரல் அருகே வாக்காளர்களுக்கு சிக்கன் பிரியாணி

ஏரல் அருகே
ஏரல், அக்.18&
ஏரல் அருகே உள்ள மொட்டத்தாதன்விளையைச்சேர்ந்த தேன்ராஜ் மகன் ராஜகோபால். இவர் சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் வாக்காளர்களை கவர்வதற்காக சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார்.
இதையொட்டி நேற்று ஓட்டு பதிவின்போது சிறுத்தொண்டநல்லூர் கிழக்குத்தெருவைச்சேர்ந்த சிந்தாசேக்முகைதீன்(51), வடக்குத்தெரு பக்ருதீன்(64) ஆகிய இருவர் வேட் பாளர் சார்பில் சிக்கன் பிரியாணி தயார் செய்து அங்குள்ள ஓட்டல் அருகே வாக்காளர்களுக்கு விநியோகித்தார்களாம். அவர்கள் இருவரையும் ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன் கைது செய்தார். இதற்கு ஏற்பாடு செய்த வேட் பாளர் ராஜ கோபாலை தேடிவருகிறார்கள்.
2 பேர் கைது

கருத்துகள் இல்லை: