ஏரல் பேரூராட்சியில் திமுக வெற்றி
ஏரல், அக்.22:
ஏரல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
ஏரல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் 1843 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
ஜெயசிவசுப்பிரமணியன் (அதிமுக)&1567, தேவராஜ் (சுயே)&814, பாக்கர்அலி (காங்.)&374, மூர்த்தி (தேமுதிக)&104.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு: 1வது வார்டு: சேகுஜமான் (திமுக)&135 வாக்குகள், 2வது வார்டு: தனலெட்சுமி (சுயே) போட்டியின்றி தேர்வு, 3வது வார்டு அசோக்குமார் (அதிமுக) 196 வாக்குகள், 4வது வார்டு சாமிநாதன் (பிஜேபி) 79 வாக்குகள், 5வது வார்டு முத்துராஜ் (திமுக) 153 வாக்குகள், 6வது வார்டு சிவக்குமார் (அதிமுக) 141 வாக்குகள், 7வது வார்டு கீதா (அதிமுக) 102 வாக்குகள், 8வது வார்டு டல்சி (திமுக) 154 வாக்குகள், 9வது வார்டு நவநீதகிருஷ்ணன் (திமுக) 142 வாக்குகள், 10வது வார்டு ரசுல்பீவி (சுயே) 195 வாக்குகள், 11வது வார்டு ராமர் (சுயே) 248 வாக்குகள், 12வது வார்டு மணிவண்ணன் (திமுக) 208 வாக்குகள், 13வது வார்டு ஜோசப்லாரன்ஸ் (அதிமுக) 141 வாக்குகள், 14வது வார்டு பிச்சையா (அதிமுக) 161 வாக்குகளும், 15வது வார்டு பேபிமகேஷ் (திமுக) 176 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற பாலகிருஷ்ணன் (திமுக) தேர்தல் அதிகாரியிடம் சான்றிதழ் பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக